Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர் போராட்டத்திற்கு பின் ஆடி கார் ஐஸ்வர்யாவுக்கு ஜாமீன்

Webdunia
வெள்ளி, 12 ஆகஸ்ட் 2016 (13:20 IST)
தொழிலாளி மீது மது அருந்திவிட்டு மோதி விபத்துக்குள்ளான வழக்கில் தொழிலதிபர் மகள் ஐஸ்வர்யாவுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

 
சென்னை தரமணியில் கடந்த 1ம் தேதி மதுபோதையில் காரை ஓட்டி வந்த ஐஸ்வர்யா, தொழிலாளி ஒருவர் மீது ஏற்றி விபத்துக்கு உள்ளாக்கினார். இந்த விபத்தில் முனுசாமி என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
 
இதனையடுத்து, ஐஸ்வர்யா கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
 
இந்நிலையில், ஐஸ்வர்யா ஜாமின் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதுவரை மூன்று முறை ஐஸ்வர்யாவின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
 
இந்நிலையில் மீண்டும் அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
 
நிர்ணயிக்கப்பட்ட அளவை விட குறந்த அளவே மது அருந்தியதாக ஐஸ்வர்யா தரப்பிலும், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாகவே மருந்து அருந்தியதற்கான ஆதாரம் இருப்பதாக அரசு தரப்பு வழக்கறிஞரும் வாதாடினர்.
 
இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி ஜாமீன் மனு மீதான தீர்ப்பை இன்றைக்கு ஒத்திவைத்தார். இந்நிலையில், ஐஸ்வர்யாவுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments