Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்லை கண்ணனுக்கு ஜாமீன் ! ஹெச்.ராஜாவுக்கு பதிலடி கொடுத்த சீமான் !

Webdunia
வெள்ளி, 10 ஜனவரி 2020 (17:59 IST)
பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சமீபத்தில் கூட்டமொன்றில் நெல்லை கண்ணன் பேசியதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அவரை சமீபத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனை அடுத்து நெல்லை கண்ணன் தன்னை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்
 
இந்த மனு மீதான விசாரணை  நடைபெற்ற போது,  கடந்த 3ஆம் தேதி நெல்லை கண்ணனின் ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்டது . 
 
இந்நிலையில், இன்று  நெல்லை கண்ணனுக்கு ஜாமீன் வழங்கி நெல்லை முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை அடுத்து இன்னும் சில மணி நேரத்தில் அவர் விடுதலை ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்சாவுக்கு எதிராகப் பேசியதாக நெல்லை கண்ணன் கைது செய்தபோது, பாஜக தேசிய செயலர் ராஜா ஆபரேஷன் சக்சஸ் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலடி தரும் வகையில் இன்று, சீமான் தனது டுவிட்டர் பக்கத்தில் , அப்பா நெல்லை கண்ணன் பிணையில் விடுதலை!!  ஆபரேசன் பெயிலியர்! என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments