Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை

Webdunia
புதன், 6 ஜூலை 2016 (08:19 IST)
சென்னையில் பெரம்பூரில் குப்பைத்தொட்டி ஒன்றில் பச்சிளம் குழந்தை ஒன்று வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
பெரம்பூர் தில்லை நகரில் 6-வது தெருவில் குப்பை தொட்டி ஒன்றில் பிறந்து ஒரே ஒரு நாளான பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று இறந்து கிடந்தது. தொப்புள் கொடி கூட அறுக்கப்படாமல் அந்த குழந்தை கிடந்தது. இதனால் இந்த குழந்தை கள்ளத் தொடர்பால் பிறந்திருக்கலாம் எனவும் அதனால் கல் நெஞ்சம் கொண்ட அந்த பெண், குழந்தையை இப்படி தூக்கி வீசிவிட்டு போயிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
 
பச்சிளம் குழந்தை குப்பைத்தொட்டியில் கிடந்ததை பார்த்த ஒருவர் காவல்துறைக்கு கொடுத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் குழந்தையின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளத்தொடர்பால் குழந்தை பிறந்ததால் குப்பை தொட்டியில் வீசினார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுமி வன்கொடுமை, கொலை! கும்பமேளா சென்ற குற்றவாளி! சேஸ் செய்து பிடித்த போலீஸ்!

வெளிமாநிலத்தவர்கள் நிலம் வாங்க தடை.. உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய சட்டம்..!

உதயநிதி சரியான ஆளாக இருந்தால் "Get Out Modi" என்று சொல்லி பார்க்கட்டும்: அண்ணாமலை

அண்ணாமலைக்கு தில் இருந்தா அண்ணாசாலைக்கு வர சொல்லுங்க! - உதயநிதி ஸ்டாலின் சவால்!

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

அடுத்த கட்டுரையில்
Show comments