Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராம்குமார் தீவிரவாதியா?

Webdunia
புதன், 6 ஜூலை 2016 (07:52 IST)
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தீவிரவாதியா என கேள்வி எழுப்பியுள்ளார் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி.


 
 
சுவாதி கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, ராம்குமாருக்கு ஆதரவாக வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி களம் இறங்கியுள்ளார். இந்த கொலைக்கும், ராம்குமாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
 
நேற்று மதியம் ராம்குமார் சார்பாக வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறும்போது, ராம்குமார் ஒரு சாதாரண விவசாயியின் மகன்.
 
ராம்குமார் கைது செய்வதற்கு முதல் நாள் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போதே அவரை போலீசார் கைது செய்திருக்கலாம். அதை விட்டு இரவு நேரத்தில் அவரை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? என்றார்.
 
ராம்குமாரை இரவு நேரத்தில் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? அவர் என்ன தீவிரவாதியா என்று, ராம்குமாரின் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி கேள்வி எழுப்பினார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுமி வன்கொடுமை, கொலை! கும்பமேளா சென்ற குற்றவாளி! சேஸ் செய்து பிடித்த போலீஸ்!

வெளிமாநிலத்தவர்கள் நிலம் வாங்க தடை.. உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய சட்டம்..!

உதயநிதி சரியான ஆளாக இருந்தால் "Get Out Modi" என்று சொல்லி பார்க்கட்டும்: அண்ணாமலை

அண்ணாமலைக்கு தில் இருந்தா அண்ணாசாலைக்கு வர சொல்லுங்க! - உதயநிதி ஸ்டாலின் சவால்!

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

அடுத்த கட்டுரையில்
Show comments