பெண் காவலருக்கு ஸ்டேஷனிலேயே வளைகாப்பு… வைரலாகும் புகைப்படம்!

Webdunia
புதன், 16 செப்டம்பர் 2020 (10:41 IST)
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் மகளிர் காவல் நிலையத்திலேயே வளைகாப்பு நடத்தி வைத்துள்ளார் இன்ஸ்பெக்டர் கற்பகம்.

விஜயகுமார் என்பவர் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவர் மனைவி மீரா பர்கூர் காவல் நிலையத்தில் காவலராக உள்ளார். இருவரும் பணி காரணமாக கிருஷ்ணகிரியில் தங்கி இருக்க, அவர்களின் பெற்றோர் திருச்சியில் உள்ளனர்.

இந்நிலையில் மீரா 7 மாத கர்ப்பமாக இருக்க, வளைகாப்பு நடத்த அவர்களது பெற்றோர்களால் ஊரடங்கு காரணமாக வர முடியவில்லை. இதனால் மீரா மனமுடைந்து விடக் கூடாது என நினைத்த பர்கூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கற்பகம், ஸ்டேஷனிலேயா மீராவுக்கு வளைகாப்பு செய்ய முடிவு செய்து, பாரம்பர்ய முறைப்படி சீர்வரிசை செய்து ஐந்து வகை சாதத்தோடு வளைகாப்பை சிறப்பாக நடத்தி முடித்துள்ளார். இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னைக்கு மட்டும் மெட்ரோ போதும்: கார்த்தி சிதம்பரம் கருத்தால் பரபரப்பு..!

தீவிரவாதிகளின் திடீர் தாக்குதல்: பாகிஸ்தானின் மூன்று FC கமாண்டோக்கள்..!

இந்திய பாஸ்போர்ட் செல்லாது.. சீன பாஸ்போர்ட் வேண்டும்.. அருணாச்சல பிரதேச பெண்ணிடம் அடாவடி செய்த சீன அதிகாரிகள்..!

அயோத்தி ராமர் கோவிலில் கொடியேற்ற விழா.. 161 அடி கொடியை ஏற்றுகிறார் பிரதமர் மோடி..!

வங்கக்கடலில் இன்னொரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு.. நாளை உருவாக வாய்ப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments