Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அயோத்தி தீர்ப்பு எதிரொலி: சென்னையில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்

Webdunia
சனி, 9 நவம்பர் 2019 (08:11 IST)
அயோத்தி வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வர உள்ள நிலையில் சென்னை மாநகர போலீசார் தயார் நிலையில் இருக்க காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 
 
சென்னையில் உள்ள தனியார் விடுதிகள் மற்றும் பிரச்சினைக்குரிய இடங்களை போலீசார் ஆய்வு செய்து வருவதாகவும், நகரம் முழுவதும் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக வழிபாட்டு தலங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
மேலும் நகரின் முக்கிய பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளதாகவும், தீர்ப்புக்கு பின் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள காவல்துறை தயார் நிலையில் உள்ளதாகவும் காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது
 
சென்னையில் உள்ள முக்கிய ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது என்பதும், பயணிகளின் உடமைகள் சோதனைக்கு பின்னரே ரயில் நிலையங்களில் அனுமதிக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாநிலங்களவையில் 2 சீட்டுகளுமே அதிமுக வேட்பாளர்கள்! அதிர்ச்சியில் தேமுதிக? - அடுத்த முடிவு என்ன?

பாஜக அரசைக் கண்டித்து பொதுக்குழுவில் திமுக தீர்மானம்!

சமஸ்கிருதத்தில் இருந்து தான் தமிழ் பிறந்தது என்றால் நாம் ஏற்று கொள்வோமா? கமலுக்கு கவர்னர் கேள்வி

சட்டக்கல்லூரி மாணவி கைது.. மம்தா பானர்ஜி - பவன் கல்யாண் ஆவேசமான வாக்குவாதம்..!

விஜய் தலைமையில் கூட்டணி அமைந்தால் அது இன்னொரு மக்கள் நல கூட்டணி தான்: மணி

அடுத்த கட்டுரையில்
Show comments