Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண் எஸ்.ஐ.க்கு கொலை மிரட்டல் விடுத்த சென்னை ஆட்டோ ஓட்டுநர் கைது!

Webdunia
திங்கள், 7 ஜூன் 2021 (18:56 IST)
பெண் எஸ்.ஐ.க்கு கொலை மிரட்டல் விடுத்த சென்னை ஆட்டோ ஓட்டுநர் கைது!
சென்னையில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் பெண் எஸ்ஐ ஒருவரை மிரட்டிய வீடியோ இணையதளங்களில் வைரலான நிலையில் சற்று முன் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் 
 
சென்னையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் அக்பர் அலி என்பவர் போலி இபாஸ் எடுத்து ஆட்டோ ஓட்டியதாக தெரிகிறது. இதனை அடுத்து அவரை மடக்கிப் பிடித்த கிருத்திகா என்ற எஸ்ஐ ஆட்டோவை பறிமுதல் செய்தார் இதனால் ஆத்திரமடைந்த அக்பர் அலி பெண் எஸ்ஐ கிருத்திகாவை தகாத வார்த்தைகளில் பேசியதோடு சாபம் விட்டதாகவும் தெரிகிறது
 
இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலான நிலையில் தற்போது ஆட்டோ ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆட்டோ ஓட்டுனர் பெண் எஸ்ஐ கிருத்திகாவை ஒருமையில் பேசியதோடு தகாத வார்த்தைகளும் பேசிய வீடியோவால் ஆட்டோ ஓட்டுனர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments