Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜாமீனுக்கு மல்லுக்கட்டும் ஆடி கார் ஐஸ்வர்யா

ஜாமீனுக்கு மல்லுக்கட்டும் ஆடி கார் ஐஸ்வர்யா
, வெள்ளி, 15 ஜூலை 2016 (14:19 IST)
குடி போதையில் காரை ஓட்டிச்சென்று தொழிலாளி ஒருவர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார் பிரபல தொழில் அதிபரின் மகள் ஐஸ்வர்யா. இவர் பிரபல விலை உயர்ந்த காரனா ஆடி காரை ஓட்டி சென்று இந்த விபத்தை ஏற்படுத்தியதால் ஆடி கார் ஐஸ்வர்யா என கூறப்படுகிறார்.


 
 
சென்னை, தரமணியில், மதுபோதையில் கார் ஓட்டி ஐஸ்வர்யா ஏற்படுத்திய இந்த விபத்தில் முனுசாமி என்ற தொழிலாளி ஒருவர் இறந்தார். இந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தில் 2-வது முறையாக ஜாமீன் கோரி ஆடி கார் ஜஸ்வர்யா மனுதாக்கல் செய்துள்ளார்.
 
ஏற்கனவே இது தொடர்பாக, ஐஸ்வர்யா ஜாமீன் மனு ஒன்றை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். ஆனால், அவரது ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
 
இந்நிலையில் இன்று மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2-வது முறையாக ஜாமீன் கோரி ஆடி கார் ஐஸ்வர்யா மனுதாக்கல் செய்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தங்க சட்டை புனே தொழிலதிபர் தாத்தாபுகே அடித்துக் கொலை