ஒரு கோடி மதிப்புள்ள சட்டையை அணிந்து பிரபலமான புனே தொழிலதிபர் தாத்தாபுகே மர்ம நபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாத்தாபுகே சிட்பண்ட் தொழில்செய்து வருகிறார். இவர் 2013ஆம் ஆண்டு, ரூ.1.2 கோடி செலவில் 3.2 கிலோ தங்கத்தை உருக்கி, அதை சட்டையாக அணிந்து புத்தாண்டை கொண்டாடினார். அவரின் புகைப்படம் சமூகவலைத்தளங்களிலும், ஊடங்களிலும் வைரலாக பரவியதால், இந்தியா முழுவதும் அவர் பிரபலமானார்.
இந்நிலையில் நேற்று இரவு, ஒரு பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு, அவரின் நண்பரிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது. இதையடுத்து அவர் தனது மகனை அழைத்துக்கொண்டு, ஒரு திறந்த வெளி மைதானத்திற்கு சென்றார். அப்போது அங்கு வந்த 12 பேர் அடங்கிய கும்பல் அவரை கற்கள் மற்றும் கூர்மையான ஆயுதங்கள் கொண்டு தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
பணவர்த்தனை தொடர்பான பிரச்சனையில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். சந்தேகத்தின் பெயரில் தற்போது நான்கு பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.