Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. தமிழகத்தில் மீண்டும் மழை: வானிலை அறிவிப்பு..!

Mahendran
வெள்ளி, 10 ஜனவரி 2025 (15:17 IST)
வளிமண்டல சுழற்சி காரணமாக மீண்டும் தமிழகத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்த நிலையில், கடந்த சில நாட்களாக மழை இல்லாமல் உள்ளது. இந்த நிலையில், நேற்று வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய பூமத்திய ரேகை பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகி இருப்பதாகவும், இதன் காரணமாக இன்றும் நாளையும் (ஜனவரி 10 மற்றும் 11) தமிழகத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்றும் நாளையும் தமிழகத்தில் உள்ள சில பகுதிகளிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான முதல் மிதமான மழை பெய்யும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதே நேரத்தில் ஜனவரி 12ஆம் தேதி தமிழகத்தின் பல இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும். ஜனவரி 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் சில பகுதிகளிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும்.

சென்னையை பொருத்தவரை, இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக என்ற பெயரை விட 'Drug mafia kazhagam' என்கிற பெயரே பொருத்தமாக இருக்கும்: பாஜக

அண்ணா பெயரை உச்சரிக்க, கருணாநிதியின் மகனுக்கு அருகதை இருக்கிறதா? எடப்பாடி பழனிசாமி

ஈரானின் கைகளால் அமெரிக்காவின் முகத்தில் அறை விழுந்துள்ளது.. போருக்கு பின் வெளியே வந்த கமேனி..!

இந்திரா காந்தி ஹிட்லருக்கு சமமானவர்.. பாஜக சமூக வலைத்தள பதிவால் சர்ச்சை..!

தமிழக அரசு மதுக்கடைகளை மூட வேண்டும். போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும்.. திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments