வீடு தேடி வரும் ஏடிஎம் இயந்திரங்கள்: நெல்லை எஸ்பிஐ அசத்தல்

Webdunia
வெள்ளி, 27 மார்ச் 2020 (09:08 IST)
வீடு தேடி வரும் ஏடிஎம் இயந்திரங்கள்
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் அத்தியாவசிய தேவைகள் கொண்ட கடைகள் மட்டும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக ஏடிஎம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் எஸ்பிஐ வங்கி சார்பில் வாடிக்கையாளர் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் நெல்லையில் பொதுமக்கள் பணம் எடுக்க ஏடிஎம் எந்திரத்தை தேடிவராமல் இருக்க சிறப்பு ஏற்பாடாக முக்கிய தெருக்களுக்கு ஏடிஎம் வாகனம் வருகிறது.
 
ஒவ்வொரு தெருவிலும் ஒவ்வொரு வீடு முன்பும் சில நிமிடங்கள் நிற்கும் இந்த ஏடிஎம் எந்திரத்தின் வாகனத்தை நெல்லை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதேபோல் சென்னை உள்பட மற்ற நகரங்களிலும் முக்கிய பகுதிகளுக்கு ஏடிஎம் இயந்திரம் கொண்ட வாகனங்களை அனுப்ப வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் இதுபோன்ற சிறப்பு வசதிகளை வங்கி நிர்வாகம் செய்து கொடுத்தால்தான் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதை தவிர்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments