Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை: ஹரியானாவில் முக்கிய குற்றவாளி கைது..!

Webdunia
வியாழன், 16 பிப்ரவரி 2023 (15:04 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னால் திருவண்ணாமலையில் ஒரே நேரத்தில் நான்கு ஏடிஎம் மையங்களில் மர்ம கும்பல் கொள்ளையடித்தது என்பதும் கொள்ளையடித்த பணத்தின் மதிப்பு 75 லட்சம் என்றும் கூறப்பட்டது. 
 
இதனை அடுத்து கொள்ளையாளர்களை பிடிக்க 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஆந்திரா கர்நாடகா ஹரியானா ஆகிய மாநிலங்களில் குற்றவாளிகளை தேடி வந்தன. இந்த நிலையில் ஹரியானாவில் திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளைக்கு காரணமான முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
இது குறித்து அந்த கொள்ளையனிடம் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வந்ததாகவும் அந்த கொள்ளையனின் கூட்டாளிகளையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
முதல் கட்ட விசாரணையில் கொள்ளைக்கு பிறகு பெங்களூர் சென்று அங்கிருந்து விமான மூலம் ஹரியானாவுக்கு கொள்ளையர்கள் தப்பி உள்ளது தெரியவந்துள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

புகையிலை பொருட்களுக்கான தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு..! தமிழக அரசு உத்தரவு..!!

வியட்நாமில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ; 14 பேர் உடல் கருகி சாவு!

8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!

சிறுமியிடம் ஆபாச செய்கை செய்தவர் போக்சோவில் கைது!

மத்திய தகவல் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தரிசனம்-கொடி மரத்தில் தியானம்....

அடுத்த கட்டுரையில்
Show comments