Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.90 ஆயிரம் பறிபோன அதிர்ச்சியில் உயிரிழந்த சென்னை பெண்

Webdunia
திங்கள், 22 ஜனவரி 2018 (22:40 IST)
சென்னை அண்ணா நகரை சேர்ந்த ஜெயலட்சுமி என்ற வயதான பெண் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் சிறுக சிறுக சேர்த்து வைத்த ரூ.90 ஆயிரம் பணம் ஆன்லைன் மூலம் ஒரே நாளில் கொள்ளையடிக்கப்பட்டதை அறிந்த அதிர்ச்சியில் மாரடைப்பால் உயிரிழந்தார்.

சென்னை  பெண் ஜெயலட்சுமிக்கு நேற்று ஒரு மர்ம போன்கால் வந்தது. அதில் தாங்கள் வங்கியில் இருந்து பேசுவதாகவும், உங்களுடைய ஏடிஎம் அட்டை காலாவதி ஆகிவிட்டதால் புதிய ஏடிஎம் அட்டை பெற உங்களுடைய ஏடிஎம் அட்டை எண் மற்றும் ஓடிபி எண்ணை தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்கப்பட்டுள்ளது.

இதனை நம்பிய ஜெயலட்சுமி ஏடிஎம் அட்டை எண் மற்றும் தனது மொபைலுக்கு வந்த ஓடிபி எண்ணை கூறியுள்ளார். பின்னர் மறுநாள் வங்கிக்கு சென்று புதிய ஏடிஎம் அட்டையை கேட்டபோதுதான் தன்னுடைய வங்கி கணக்கில் இருந்து ரூ.90 ஆயிரமும் எடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த அதிர்ச்சியை தாங்க முடியாத ஜெயலட்சுமி உடனே மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments