Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நைட் ஷிஃப்ட் முடிந்து வந்த மகன்; கள்ளகாதலுடன் தாய்! – குமரியில் கொடூர சம்பவம்!

Webdunia
வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (10:38 IST)
கன்னியாக்குமரியில் கள்ளக்காதலுடன் இருந்த பெண்ணை அவரது கணவரே வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் அருகே ஆசாரிப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் ராமதாஸ். இவருக்கு லீலாவதி என்ற பெண்ணுடன் திருமணமாகி தற்போது 20 வயதில் அஜித் என்ற மகனும் உள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ராமதாஸுக்கும், லீலாவதிக்கும் சண்டை ஏற்பட்டதால் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மகன் அஜித் தனது தந்தையோடு வசித்து வந்தாலும் அடிக்கடி தாயை சென்று சந்தித்து வந்துள்ளார்.

அஜித் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். நேற்று நைட் ஷிஃப்ட் பணி முடிந்து அதிகாலையில் வீடு திரும்பிய அஜித் தனது அம்மாவின் வீட்டில் லை எரிந்து கொண்டிருப்பதை கண்டு அங்கு சென்றுள்ளார். அங்கு தன் தாய் வேறு ஒரு நபரோடு உல்லாசமாக இருப்பதை கண்ட அஜித் அதிர்ச்சியடைந்துள்ளார். அதை தாங்க முடியாமல் தனது தந்தையிடமும் சென்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராமதாஸ் மனைவியின் வீட்டிற்கு சென்று அவரை சரமாரியாக வெட்டிக் கொன்று விட்டு போலீஸில் சரண் அடைந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments