Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா மரண விசாரணை: நீதிபதி ஆறுமுகசாமி மருத்துவமனையில் அனுமதி

Webdunia
புதன், 31 அக்டோபர் 2018 (15:15 IST)
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை நடத்தி வந்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தற்பொழுது உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளதால் அவரது மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மருத்துவர்கள், அமைச்சர்கள் என 100க்கும் மேற்பட்டோரிடம் இதுவரை விசாரணை நடைபெற்றுள்ளது.
 
இதுவரை விசாரணைக் கமிஷனின் காலக்கெடு 3 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்பொழுதும் 4 மாதம் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் இந்த விசாரணையை நடத்திவரும் ஆறுமுகசாமி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்.! நயினார் நாகேந்திரனுக்கு முக்கிய சம்மன்.!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்கு. எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு முன் ஜாமீன்..!

பரம்பரை சொத்துக்களுக்கு வரி..! காங்கிரஸின் ஆபத்தான உள்நோக்கங்கள்..! பிரதமர் மோடி..!!

பொய்களை கூறி கண்ணியத்தை குறைத்துக் கொள்ளக்கூடாது..! ராஜ்நாத் சிங்கிற்கு, ப.சிதம்பரம் அறிவுரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments