அதிமுக கூட்டணியில் தொடருவோம்: புரட்சி பாரதம் கட்சி அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (13:32 IST)
பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக அறிவித்த நிலையில் தேசிய அளவில் என்.டி.ஏ கூட்டணியிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் தொடர்வோம் என புரட்சி பாரதம் கட்சி தெரிவித்துள்ளது. 
 
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக கூட்டணியில் தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை நடத்தி போட்டியிடுவோம் என்று புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவே ஜெகன்மூர்த்தி தெரிவித்துள்ளார். 
 
தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணியில் புரட்சி பாரதம் இடம்பெறாது என்றும் அவர் உறுதிபடக் கூறியுள்ளார். 
 
இதேபோல் இன்னும் சில கட்சிகள் அதிமுக கூட்டணியில் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பாஜக தனித்துவிடப்படுமா? அல்லது அக்கட்சி தனியாக ஒரு கூட்டணி அமைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!..

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments