Webdunia - Bharat's app for daily news and videos

Install App

20 லட்சம் மாணவர்களுக்கு ஆன்லைனிலேயே தேர்வு...

Webdunia
திங்கள், 24 ஜனவரி 2022 (10:44 IST)
அரியர் மாணவர்களுக்கும் ஆன்லைனிலேயே தேர்வு நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். 

 
தமிழகத்தில் கொரோனா மீண்டும் தீவிரமடைய தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. பள்ளி, கல்லூரிகள் ஜனவரி 31 வரை மூடப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகளும் ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.
 
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலமாக நடைபெறும் என அமைச்சர் பொன்முடி அறிவித்தார். தமிழகத்தில் உள்ள பல்கலைகழகங்கள், அரசு, தனியார் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வு நடைபெறும் என்றும் பிப்ரவரி 1 தொடங்கி 20 ஆம் தேதி வரை ஆன்லைன் தேர்வுகள் நடைபெறும் என்றும் அறிவித்தார். 
 
இதனிடையே தற்போது அரியர் மாணவர்களுக்கும் ஆன்லைனிலேயே தேர்வு நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். ஆன்லைக் செமஸ்டர் தேர்வை 20,00,875 மாணவர்கள் எழுத உள்ளனர் எனவும் மாணவர்களின் எண்ணிக்கையை வெளியிட்டார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2000 ரூபாய் நோட்டுக்கள் போல் 500 ரூபாயும் திரும்ப பெறப்படுமா? டிஜிட்டலுக்கு மாற வலியுறுத்தல்..!

முதல்வர் ஸ்டாலினை அடுத்து மதுரைக்கு வரும் அமித்ஷா.. பாஜக நிர்வாகிகளை சந்திக்க திட்டம்..!

பள்ளிகளில் முகக்கவசம் அணிவதற்கு உத்தரவிடப்படுமா? அமைச்சர் அன்பில் மகேஷ்

நோய்க்கிருமிகளை அமெரிக்காவுக்கு கடத்திய சீன விஞ்ஞானிகள் கைது.. மிகப்பெரிய விபரீதம் தடுப்பு..!

ராணுவ வீரர்களின் தனிப்பட்ட தகவல்களை வெளியிட கூடாது: ஊடகங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments