Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருத்தணி முருகனுக்கு அரோகரா.. நாளைய முதல்வர் எடப்பாடி வாழ்க.. காயத்ரி ரகுராமின் ஆன்மீக அரசியல்..!

Mahendran
புதன், 28 மே 2025 (13:10 IST)
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலில் தங்கத்தேர் பவனியில் கலந்து கொண்ட நடிகை காயத்ரி ரகுராம் உள்ளிட்ட அதிமுகவினர் எடப்பாடி பழனிசாமி வாழ்க என்று கூறி அவருடைய புகைப்படத்தை வைத்துக்கொண்டு வலம் வந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
தங்கத்தேர் பவனியில் அரசியலா என கோவில் நிர்வாகத்தினர்  மற்றும் பக்தர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
 
அதிமுகவை சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம், முன்னாள் எம்எல்ஏ உள்பட சிலர் தங்கதேர் வரும்போது தேரின் முன்பகுதியை ஆக்கிரமித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் உருவத்தை கையில் வைத்து கொண்டு நாளைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்க என கோசமிட்டனர்..
 
இதனால் பக்தர்கள் அதிருப்தி அடைந்து ’இது என்ன ஆன்மீக நிகழ்ச்சியா அல்லது அரசியல் நிகழ்ச்சியா? இங்கே வந்து எதற்காக அரசியல் செய்கிறீர்கள் ? முருகன் தேரில் வரும் போது எடப்பாடி பழனிச்சாமி வாழ்க என ஏன் கூறுகிறீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயத்தில் மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்: முதல்வர் ஸ்டாலின்

அயோத்தியில் 2ஆம் கட்ட கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடு..!

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்த வாரத்தில் 2வது நாளாக உயரும் தஙக்ம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படுகிறதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments