Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாமியார் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய ராணுவ வீரர்.. போலீஸார் வழக்குப்பதிவு..!

Webdunia
வெள்ளி, 3 நவம்பர் 2023 (19:04 IST)
மதுரையில் மாமியார் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய ராணுவ வீரர் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதுரை சோழவந்தனை சேர்ந்த சூரிய பிரகாஷ் என்பவர் ராணுவத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் அவர் விடுமுறைக்கு வீடு வந்துள்ளார். ஆனால் தனது மனைவி கார்த்திகா குழந்தையுடன் மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளதை அடுத்து அவர் மாமியார் வீடு சென்று மனைவியை வீட்டுக்கு அழைத்துள்ளார்.

ஆனால் அவரது மனைவி வராததை அடுத்து அவரது வீட்டில் தகராறு செய்த சூர்யா பிரகாஷ்  குழந்தையையும் வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்றதாக தெரிகிறது. இதையடுத்து மனைவி அளித்த புகாரின் அடிப்படையில்  வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர்

சூரிய பிரகாஷ் தனது மனைவி வீட்டுக்கு செல்லும் போது மது போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி 10 சவரன் நகை கேட்டு கணவர் மற்றும் மாமியார் மாமனார் கொடுமைப்படுத்தியதாகவும் கார்த்திகா புகார் அளித்துள்ளார்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய 200 கிலோ சத்து மாத்திரை வாய்க்காலில்.. அதிர்ச்சி சம்பவம்..!

iOS 26 ஐ அறிவித்தது ஆப்பிள் நிறுவனம்! ஆனால் இந்த மாடல்களில் மட்டும்தான் வொர்க் ஆகுமாம்! - புது சிறப்பம்சங்கள் என்ன?

விஜய் மல்லையாவுக்கு இன்னும் ரூ.7000 கோடி கடன் உள்ளது. இந்திய வங்கிகள் அறிவிப்பு..!

சிங்கப்பூர் கப்பல் விபத்து.. உயிருக்கு போராடியவர்களை மீட்ட இந்திய கப்பல் படை.. நன்றி தெரிவித்த தூதரகம்..!

நேற்றைய ஏற்றத்திற்கு பின் இன்று பங்குச்சந்தை நிலவரம் என்ன? சென்செக்ஸ் 83000 செல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments