மாமியார் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய ராணுவ வீரர்.. போலீஸார் வழக்குப்பதிவு..!

Webdunia
வெள்ளி, 3 நவம்பர் 2023 (19:04 IST)
மதுரையில் மாமியார் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய ராணுவ வீரர் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதுரை சோழவந்தனை சேர்ந்த சூரிய பிரகாஷ் என்பவர் ராணுவத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் அவர் விடுமுறைக்கு வீடு வந்துள்ளார். ஆனால் தனது மனைவி கார்த்திகா குழந்தையுடன் மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளதை அடுத்து அவர் மாமியார் வீடு சென்று மனைவியை வீட்டுக்கு அழைத்துள்ளார்.

ஆனால் அவரது மனைவி வராததை அடுத்து அவரது வீட்டில் தகராறு செய்த சூர்யா பிரகாஷ்  குழந்தையையும் வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்றதாக தெரிகிறது. இதையடுத்து மனைவி அளித்த புகாரின் அடிப்படையில்  வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர்

சூரிய பிரகாஷ் தனது மனைவி வீட்டுக்கு செல்லும் போது மது போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி 10 சவரன் நகை கேட்டு கணவர் மற்றும் மாமியார் மாமனார் கொடுமைப்படுத்தியதாகவும் கார்த்திகா புகார் அளித்துள்ளார்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாமல் முதலமைச்சராகும் நிதிஷ்குமார்.. இந்த முறையும் அப்படித்தான்..!

புலி இன்னமும் சக்தியோடு தான் உள்ளது: நிதிஷ் குமார் இல்ல வாசலில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு!

பிகார் சட்டப்பேரவை தேர்தல்: மண்ணை கவ்விய பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி..!

திமுகவில் இணைந்த மைத்ரேயனுக்கு புதிய பொறுப்பு.. துரைமுருகன் அறிவிப்பு..!

வாரத்தின் கடைசி நாளில் திடீரென சரியும் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments