Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பினராயி விஜயன் அரசு டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும்: அர்ஜூன் சம்பத்

Webdunia
சனி, 20 அக்டோபர் 2018 (18:53 IST)
சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைதொடர்ந்து அங்கு ஐயப்ப பக்தர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மேலும், பெண்களை அனுமதிக்க மாட்டோம் என பல தரப்பினர் கூறி வருகின்றனர். 
 
இந்நிலையில், இது குறித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் பின்வருமாறு பேசினார். கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டின் பல தீர்ப்புகளை உதாசீனப்படுத்தி உள்ளது. ஆனால், சபரிமலை விவகாரத்தில் மட்டும் கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்த ஆர்வமாக உள்ளது. 
 
நேற்று 2 பெண்களை சபரிமலைக்கு அழைத்து செல்வதற்கு முதல்வர்  பினராய் விஜயனே காரணம். இதன்மூலம் நாடு முழுக்க கலவரம் ஏற்படுத்த முயற்சி நடக்கிறது.
 
மேலும், சபரிமலை கோவில் பிரச்சினைக்காக போராடிய பந்தளம் மன்னர் குடும்பத்தினர், தந்திரிகள் துன்புறுத்தப்பட்டு உள்ளனர். இதற்காக கேரள அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments