Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அசாமில் குட்டைக்குள் பாய்ந்த பஸ் - 7 பேர் பரிதாப பலி

Webdunia
சனி, 20 அக்டோபர் 2018 (18:34 IST)
அசாம் மாநிலத்தின்  தலைநகரான கவுகாத்தியில் இருந்து சென்ற அரசு பேருந்து ஓன்று நல்பாரி மாவட்டத்தில் உள்ள குட்டைக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே  7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 
அசாம் மாநில அரசு பேருந்தில்  சுமார் 50க்கும் மேற்பட்ட பயணிகள் பார்பேட்டா நகரை நோக்கி பயணம் செய்தனர். மாலை 3.30 மணியளவில் நல்பாரி என்ற மாவட்டத்தின் வழியாக சென்றுக்கொண்டிருந்தபோது , அடபாரி என்னுமிடத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரத்தில் இருந்த ஒரு குட்டைக்குள் பாய்ந்தது.
 
அந்த பேருந்தில் பயணம் செய்த  7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயங்களுடன் மீட்கப்பட்ட 20-க்கும் அதிகமானோர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குட்டைக்குள் மூழ்கிய மேலும் சிலரை மீட்பதற்காக மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
 
இந்நிலையில் இந்த கோர விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments