Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலினுக்கு நல்ல புத்தி வர வேண்டும்! – தேங்காய் உடைத்த அர்ஜுன் சம்பத்!

Webdunia
திங்கள், 6 ஜனவரி 2020 (13:19 IST)
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நல்ல புத்தி வர வேண்டும் என அர்ஜின் சம்பத் தேங்காய் உடைத்து வழிபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் பேரணியை நடத்தின. இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நூதனமான வழிபாடு ஒன்றை முன் வைத்திருக்கிறார் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்.

தூத்துக்குடியில் உள்ள இசக்கியம்மன் கோவிலில் நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்ட அர்ஜுன் சம்பத் ஸ்டாலின் மற்றும் கம்யூனிஸ்டு தலைவர்களுக்கு நல்ல புத்தியை தர வேண்டும் என வேண்டி 108 தேங்காய்கள் உடைத்துள்ளார்.

மேலும் செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் சம்பத் குடியுரிமை சட்டம் குறித்த தவறான தகவல்களை எதிர்கட்சிகள் பரப்பிவிட்டதாக கூறியுள்ளார். அடுத்ததாக விவேகானந்தர் பிறந்தநாளில் மதுவிலக்கு அறிவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி போராட இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனுமதியின்றி நெடுஞ்சாலையில் ரேக்ளா போட்டி: குதிரைக்கு காயம்! கோவை அருகே பரபரப்பு..!

அன்புமணியை நான் கொஞ்சம் விவரமானவர் என்று நினைத்தேன்.. அமைச்சர் துரைமுருகன்

திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகைகள் திருட்டு.. கதறி அழுத சிஆர்பிஎப்., பெண் காவலர்..!

சென்னை உள்பட 28 மாவட்டங்கள்.. இன்றிரவு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த கட்டுரையில்
Show comments