Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வால் அரியலூரில் அடுத்த உயிர் பறிபோனது !

Webdunia
செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (09:22 IST)
நீட் தேர்வு பயத்தால் சேலத்தை சேர்ந்த மாணவன் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்ட நிலையில் நேற்று நீட் விலக்கு மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து நீட் நிரந்தர விலக்கு சட்ட மசோதா கொண்டு வருவோம் என முதல்வர் முக ஸ்டாலின் கூறியிருந்தார்.
 
பின்னர் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆதரவோடு நீட் தேர்வுக்கு விலக்கு கோரி கொண்டு வரப்பட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நேற்று  நிறைவேற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் மேலும், ஒரு அதிர்ச்சி தரக்கூடிய சம்பவம் நடந்துள்ளது. 
 
சேலம் மாணவன் தனுஷை தொடர்ந்து அரியலூரில் கனிமொழி என்கிற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். நீட் தேர்வு எழுதி முடித்த மாணவி கனிமொழி தேர்வு முடிவு என்னவாக வரும் என்று மன அழுத்தத்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் 12 ஆம் வகுப்பில் 600க்கு 563 மதிப்பெண் பெற்றது குறிப்பிடத்தக்கது
 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments