Publish Date: Tue, 26 Sep 2023 (15:37 IST)
Updated Date: Tue, 26 Sep 2023 (15:41 IST)
நெல்லையப்பர் கோயில் உண்டியலில் 2000 ரூபாய் நோட்டுகள் உள்ளதா என்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் அறநிலையத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு கறுப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக, பண மதிப்பு இழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட பின்னர் புதிய 500 ரூபாய் 2000 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்களிடம் 2000 ரூபாய் நோட்டு வழக்கத்தில் இல்லாத நிலையில் சமீபத்தில், திடீரென 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.
வரும் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் வங்கிகளில் கொடுத்து அல்லது பேங்கில் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்து கொள்ளலாம் என்று அறிவித்தது.
இந்த நிலையில், மக்கள் தங்களிடம் உள்ள 2 ஆயிரம் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், நெல்லையப்பர் கோயில் உண்டியலில் 2000 ரூபாய் நோட்டுகள் உள்ளதா என்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் அறநிலையத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ரூ.2000 நோட்டுகள் இருந்தால் அதை வங்கியில் டெபாசிட் செய்ய கயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.