Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொல்லியல் பட்டப்படிப்பில் தமிழ் புறக்கணிப்பு: கொதித்து எழுந்த எம்பி!

Webdunia
செவ்வாய், 6 அக்டோபர் 2020 (16:54 IST)
கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ் மொழியை மத்திய அரசு புறக்கணித்து வருவதாகவும் மத்திய அரசு தேசிய அளவில் நடத்தப்படும் தேர்வுகளில் தமிழ்மொழி புறக்கணிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. குறிப்பாக திமுக உள்பட எதிர்க்கட்சிகள் இந்த குற்றச்சாட்டை முன்வைத்து அவ்வப்போது போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர் 
 
இந்த நிலையில் சற்று முன் தொல்லியல் பட்டயப் படிப்பிற்கான அறிவிக்கையை மத்திய தொல்லியல் துறை வெளியிட்டுள்ளது. இந்தப் படிப்புக்கான கல்வித் தகுதியில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
தொல்லியல் பட்டய படிப்புக்கான கல்வித் தகுதியில் சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம், அரபி ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஆனால் செம்மொழியான தமிழ் மொழிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய அரசுக்கு மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வெங்கடேசன் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் மத்திய தொல்லியல் துறையின் பட்டயப் படிப்புக்கான கல்வித் தகுதியில் செம்மொழி வரிசையில் தமிழ் இல்லை இது கண்டனத்துக்குரியது என்று தெரிவித்துள்ளார்  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments