Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை மாவட்டத்திற்கு 23ஆம் தேதி உள்ளூர் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவு..!

Mahendran
திங்கள், 15 ஏப்ரல் 2024 (13:41 IST)
ஏப்ரல் 23ஆம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா சற்றுமுன் உத்தரவு பிறப்பித்துள்ளார். 
 
மதுரையில் சித்திரை திருவிழா தொடங்க இருப்பதை அடுத்து ஏராளமான பக்தர்கள் சித்திரை திருவிழாவை காண வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த நிலையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வு என்பது மிகவும் சிறப்பானது என்பதும் இதை காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் குவிந்திருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அந்த வகையில் வைகை ஆற்றின் கள்ளழகர் எழுந்தருளும் நாளான ஏப்ரல் 23ஆம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என்று மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவு பிறப்பித்துள்ளார். 
 
இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மே 11ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு: சென்னை உள்பட 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு

அன்னபூர்ணா உணவகத்தை நடத்துபவர்கள் திமுகவிற்கு நெருக்கமானவர்கள்: பாஜக பிரமுகர்

அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின்..! அமைச்சரவை மாற்றம் குறித்து அதிரடி பதில்.!!

திருச்சியில் ரெளடி படுகொலை.. தலை துண்டிக்கப்பட்டு இருந்ததால் பரபரப்பு..!

மெட்ரோ திட்டத்திற்கு ரூ.21,560 கோடி நிதி.. தமிழக அரசு செலவு செய்தது ரூ.5880 கோடி: வானதி சீனிவாசன்

அடுத்த கட்டுரையில்
Show comments