Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை மாவட்டத்திற்கு 23ஆம் தேதி உள்ளூர் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவு..!

Mahendran
திங்கள், 15 ஏப்ரல் 2024 (13:41 IST)
ஏப்ரல் 23ஆம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா சற்றுமுன் உத்தரவு பிறப்பித்துள்ளார். 
 
மதுரையில் சித்திரை திருவிழா தொடங்க இருப்பதை அடுத்து ஏராளமான பக்தர்கள் சித்திரை திருவிழாவை காண வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த நிலையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வு என்பது மிகவும் சிறப்பானது என்பதும் இதை காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் குவிந்திருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அந்த வகையில் வைகை ஆற்றின் கள்ளழகர் எழுந்தருளும் நாளான ஏப்ரல் 23ஆம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என்று மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவு பிறப்பித்துள்ளார். 
 
இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மே 11ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் ரூ.1.60 கோடி ரொக்கம் பறிமுதல்! பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

ஒரே ஸ்கூட்டியில் 7 சிறுவர்கள் சாகசம்.. ஸ்கூட்டி ஓனருக்கு அபராதம்.. பெற்றோருக்கு எச்சரிக்கை!

அல்-கொய்தா அமைப்புடன் தொடர்புடைய பெண் பெங்களூருவில் கைது: குஜராத் ஏடிஎஸ் அதிரடி நடவடிக்கை!

மரணம் என் வாழ்க்கையின் மிக அழகான பகுதி.. 25 வயது சிஏ அக்கவுண்டண்ட் தற்கொலை..!

தென்மாவட்டங்களை சாதிய வன்கொடுமை பகுதிகளாக அறிவிக்க வேண்டும்! - பா.ரஞ்சித் கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments