Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நன்செய் புகழூர் அழகரசனாருக்கு பாராட்டு நிகழ்வு

Webdunia
சனி, 2 டிசம்பர் 2023 (21:08 IST)
தமிழ்ச் செம்மல் விருதாளர் நன்செய் புகழூர் அழகரசனாருக்கு பாராட்டு நிகழ்வு  நடைபெற்றது. இதில், தமிழ் வளர்ச்சித் துறை இணை இயக்குநர் ஜோதி கலந்து கொண்டார்.
 
கரூர் திருக்குறள் பேரவை சார்பில் தமிழ்ச் செம்மல் - 2022 விருது பெற்ற கவிஞர் நன்செய்ப் புகழூர் அழகரனார் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
 
தமிழ்ச் செம்மல் மேலை பழநியப்பன் நன்செய் புகழூர் அழகரசனின் சிறப்புகளையும் தமிழ்நாடு அரசு மொழிக்காகவும் , மொழி அறிஞர்கள் ஆர்வலர்களுக்காக வழங்கும் விருதுகள் பரிசுகளையும் பாராட்டி வரவேற்புரை ஆற்றினார்
ப.தங்கராசு ஐயா தலைமை உரை ஆற்றினார்.
 
தமிழ் வளர்ச்சித் துறை இணை இயக்குனர் ஜோதி அவர்கள் அரசின் திட்டங்கள் , செய்பாடுகள் , மொழி நாள் வார விழா கொண்டாடப்படுவதை எடுத்துரைத்து அனைவரும் பங்கேற்க அழைப்பு விடுத்து நன்செய்ப்புகழூர் அழகரசனை பாராட்டினார்.
 
திருக்குறள் பேரவை சார்பிலும் கலந்து கொண்ட தமிழ் அமைப்புகள் ஆர்வலர்கள் சார்பிலும் சிறப்புச் செய்யப்பட்டது.
 
கவிஞர் இனியன் , கவிஞர் கன்னல் , க. ப பாலசுப்ரமண்யம் , தமிழ்ச் செம்மல் இளவரசி , ஓவியர் ரவிக்குமார் , எழுத்தாளர் ஆதவன் பேனா நண்பர் பேரவை திருமூர்த்தி கவிஞர் ரோட்டரி பாஸ்கர் , வைஷ்ணவி மெய்யப்பன் , மெடிக்கல் சோமு , லயன் வெங்கட்டரமணன் , லயன் ஜெயப்பிரகாஷ் , லயன் யோகா வையாபுரி , கவிஞர் பரமத்தி சரவணன் உட்பட பலர் வாழ்த்தினர்.
 
நன்செய்ப்புகழூர் அழகரசன் ஏற்றரை ஆற்றினார்
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments