Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவர்கள் இல்லாமல் ஜெ.வுக்கு சிகிச்சை: புதிய இயந்திரத்தை வாங்கியது அப்பல்லோ!

மருத்துவர்கள் இல்லாமல் ஜெ.வுக்கு சிகிச்சை: புதிய இயந்திரத்தை வாங்கியது அப்பல்லோ!

Webdunia
திங்கள், 17 அக்டோபர் 2016 (16:17 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்க அப்பல்லோ மருத்துவமனை புதிய இயந்திரம் ஒன்றை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.


 
 
முதல்வர் ஜெயலலிதாவுக்கு நுரையீரல் தொற்று இருப்பதாகவும் மேலும் அவருக்கு பிசியோ தெரபி சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கைகளில் கூறப்பட்டிருந்தது.
 
இந்நிலையில் பிசியோ தெரபி செய்ய மருத்துவர்கள் அடிக்கடி உள்ளே செல்வதால் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மேலும் நுரையீரல் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால் அவருக்கு மருத்துவர்கள் இல்லாமல் பிசியோ தெரபி செய்ய புதிய இயந்திரம் ஒன்றை வாங்கியுள்ளது அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம்.
 
இந்த இயந்திரத்தின் மூலம் மனிதர்களின் உதவியில்லாமல் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க முடியும், இதனை இயக்க ஒரே ஒரு மருத்துவர் இருந்தால் போதும். சிங்கப்பூரில் இருந்து வரவழைக்கப்பட்டதாக இந்த இயந்திரத்தை பற்றி அப்பல்லோ மருத்துவர்களுக்கு விளக்கி செய்து காட்ட சிங்கப்பூரில் இருந்து இரண்டு மருத்துவர்களும் சிங்கப்பூர் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 மாதங்களில் ரூ.10,000 கோடி வருமானம்.. ஜியோ ஹாட்ஸ்டாருக்கு கொட்டும் லாபம்..!

எங்கும், எப்போதும் அலட்சியம்.. விடியா திமுக அரசுக்கு எனது கண்டனம்.. ஈபிஎஸ்

நடுநிலை விசாரணைக்கு தயார்.. கடும் நெருக்கடியால் இறங்கி வந்த பாகிஸ்தான் அரசு.

சிந்து நதிநீரை நிறுத்தி எங்கே தேக்கி வைப்பீர்கள்? மத்திய அரசுக்கு ஒவைசி கேள்வி..!

அபிநந்தன் கழுத்தை அறுத்துவிடுவேன்: பாகிஸ்தான் கர்னல் செய்கையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments