திருமாவளவன் புத்தகத்தை வெளியிடுகிறார் விஜய்.. கூட்டணிக்கு அச்சாரமா?

Siva
சனி, 2 நவம்பர் 2024 (12:30 IST)
புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் மற்றும் விஜய் ஆகிய இருவரும் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுவதால் இரு கட்சிகளும் கூட்டணிகள் இணையுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 
 
சட்டமேதை அம்பேத்கார் பற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் புத்தகம் ஒன்று தயாரிக்கப்பட்ட நிலையில், இந்த புத்தகத்தில் அம்பேத்கர் குறித்த பல அரிய தகவல்கள் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. 
 
38 தழுத்து எழுத்தாளர்கள் எழுதிய கட்டுரைகள் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ள நிலையில், இந்த புத்தகத்தில் ஆதவ் அர்ஜூனா ஒரு கட்டுரை எழுதி உள்ளார். 2000 பக்கம் கொண்ட இந்த புத்தகம் வெளியீட்டு விழா சென்னையில் வரும் ஆறாம் தேதி நடைபெற இருக்கிறது. 
 
இந்த விழாவில் சில முக்கிய பிரபலங்களும் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகிய இருவரும் இவ்விழாவில் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது. 
 
அம்பேத்கர் புத்தகத்தை திருமாவளவன் வெளியிடுவார் என்றும், விஜய் அந்த புத்தகத்தின் முதல் பிரதியை பெற்றுக் கொள்வார் என்றும் கூறப்படுவதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இரு கட்சிகளும் ஒரே கூட்டணியில் இணைந்தால், அந்த கூட்டணி பெரும் மாற்றத்தை தமிழக அரசியலில் ஏற்படுத்தும் என கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments