Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீவிர தேடுதலுக்கு பின் எஸ்ஐ பாலகிருஷ்ணன் கைது: காவலர் முருகனும் கைது என தகவல்

Webdunia
வியாழன், 2 ஜூலை 2020 (07:04 IST)
எஸ்ஐ பாலகிருஷ்ணன் கைது: காவலர் முருகனும் கைது என தகவல்
சாத்தான்குளம் தந்தை - மகன் வழக்கில் நேற்றிரவு எஸ்ஐ ரகு கணேஷ் கைது செய்யப்பட்ட நிலையில் தூத்துக்குடி முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்செய்யப்பட்டார். எஸ்.ஐ. ரகு கணேஷுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் என மாஜிஸ்திரேட் ஹேமா உத்தரவு பிறப்பித்தார். மேலும் வரும் 16-ம் தேதி ரகு கணேஷை மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவு பிறப்பித்தார்.
 
இந்த நிலையில் இன்னொரு எஸ்.ஐயான பாலகிருஷ்ணன் தேடப்பட்டு வந்த நிலையில் அவர் தலைமறைவாக இருப்பதாகவும் அவரது மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததாகவும் தகவல் வெளிவந்தது. இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி பாலகிருஷ்ணன் மற்றும் தலைமை காவலர் முருகன் ஆகியோர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
 
எனவே தற்போது வரை சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கி இரண்டு எஸ்.ஐ.க்கள் ஒரு தலைமை காவலர் என மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் மூவரை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் தீவிரமாக இருப்பதாகவும் இன்னும் ஒருசில மணி நேரங்களில் அவர்களும் கைது செய்யப்படுவார்கள் எறும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண்களின் சிந்தூரை அரசியலுக்கு பயன்படுத்துவதா? மம்தா, காங்கிரஸ் விமர்சனம்..!

நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு..!

பள்ளிகள் திறப்பு ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளி போகிறதா? தமிழக அரசு விளக்கம்..!

ரூ.1.28 கோடி சம்பளம் பெற்றவர் இன்று உணவு டெலிவரி பாய்.. காரணம் AI.. அதிர்ச்சி தகவல்..!

தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், ஆனால்.. கமல்ஹாசன் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments