Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீவிர தேடுதலுக்கு பின் எஸ்ஐ பாலகிருஷ்ணன் கைது: காவலர் முருகனும் கைது என தகவல்

Webdunia
வியாழன், 2 ஜூலை 2020 (07:04 IST)
எஸ்ஐ பாலகிருஷ்ணன் கைது: காவலர் முருகனும் கைது என தகவல்
சாத்தான்குளம் தந்தை - மகன் வழக்கில் நேற்றிரவு எஸ்ஐ ரகு கணேஷ் கைது செய்யப்பட்ட நிலையில் தூத்துக்குடி முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்செய்யப்பட்டார். எஸ்.ஐ. ரகு கணேஷுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் என மாஜிஸ்திரேட் ஹேமா உத்தரவு பிறப்பித்தார். மேலும் வரும் 16-ம் தேதி ரகு கணேஷை மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவு பிறப்பித்தார்.
 
இந்த நிலையில் இன்னொரு எஸ்.ஐயான பாலகிருஷ்ணன் தேடப்பட்டு வந்த நிலையில் அவர் தலைமறைவாக இருப்பதாகவும் அவரது மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததாகவும் தகவல் வெளிவந்தது. இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி பாலகிருஷ்ணன் மற்றும் தலைமை காவலர் முருகன் ஆகியோர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
 
எனவே தற்போது வரை சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கி இரண்டு எஸ்.ஐ.க்கள் ஒரு தலைமை காவலர் என மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் மூவரை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் தீவிரமாக இருப்பதாகவும் இன்னும் ஒருசில மணி நேரங்களில் அவர்களும் கைது செய்யப்படுவார்கள் எறும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments