Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்க கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: இந்திய வானிலை ஆய்வு மையம்

Webdunia
செவ்வாய், 15 நவம்பர் 2022 (11:07 IST)
வங்க கடலில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தோன்றிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி கரையை கடந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இதன் காரணமாக தமிழகம் புதுவையில் மிதமான மழை முதல் கனமழை பெய்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் வங்கக் கடலில் மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
இதனால் தமிழக கடலோர பகுதியில் நவம்பர் 19ஆம் தேதி முதல் கனமழை பெய்யும் என்றும் 19ஆம் தேதி முதல் மழை தீவிரம் அடைய வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
ஏற்கனவே பெய்த கன மழை காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகள் மிதந்து வரும் நிலையில் மீண்டுமொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments