சரத்குமார் எண்ணிலிருந்து சரத்குமாருக்கு வந்த அழைப்பு! – அதிர்ச்சியான சரத்குமார்!

Webdunia
வியாழன், 30 ஜூலை 2020 (12:28 IST)
நடிகர் சரத்குமாருக்கு அவரது எண்ணிலிருந்தே ஒருவர் அழைத்து பேசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமா நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் சரத்குமார் எண்ணையே காட்டியுள்ளது. அதை எடுத்து பேசியபோது கோயம்புத்தூரை சேர்ந்த சாஃப்ட்வேர் இஞ்சினீயர் என ஒருவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.

எவ்வாறு தனது நம்பரிலிருந்தே போன் செய்கிறீர்கள் என சரத்குமார் கேட்க, அதற்கு அந்த நபர் ஒரு சாஃப்ட்வேர் மூலமாக அவ்வாறு செய்வதாக கூறியுள்ளார். இதுகுறித்து சரத்குமார் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். சம்பந்தபட்ட நபரின் செல்போன் எண் சரத்குமார் போனில் பதிவாகவில்லை என்றும், அதற்கு பதிலாக சரத்குமார் எண்ணே பதிவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோடநாடு கொலை வழக்கில் எடப்பாடியாருக்கு தொடர்பு! வழக்குத் தொடரப் போகிறேன்! - செங்கோட்டையனால் பரபரப்பு!

எடப்பாடியை முதல்வராக்கியவன் நான்! கட்சியை ஒருங்கிணைக்கதான் முயன்றேன்! - செங்கோட்டையன் வேதனை!

டெல்லிக்கு பாண்டவகளால் நிறுவப்பட்ட பெயரை வைக்க வேண்டும்.. அமித்ஷாவுக்கு பாஜக எம்பி கடிதம்..!

தொடர்ந்து ஒரே லிமிட்டில் ஏறி இறங்கும் தங்கம்! இனி இதுதான் விலையா? - இன்றைய நிலவரம்!

தேர்தலுக்கு முன்போ, பின்போ யாருடனும் கூட்டணி இல்லை.. பிரசாந்த் கிஷோர் உறுதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments