தமிழக சட்டசபையில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் என்னென்ன எதிர்ப்பார்க்கலாம் என்பதன் தொகுப்பு இதோ...    
 			
 
 			
					
			        							
								
																	
	 
	தமிழக சட்டசபையில் நாளை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவிருக்கும் நிலையில் 2020 - 2021 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்கிறார்.
	 
	அடுத்த ஆண்டு சட்டச்சபை தேர்தல் வரவுள்ள நிலையில் இந்த பட்ஜெட்டில் சிறப்பாக என்னென்ன அறிவிப்புகளிஅ எதிர்ப்பார்க்கலாம் என்பதன் பட்டியல் இதோ... 
	 
	# குடிமராமத்து பணிகளுக்காகவும், புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கும் கூடுதல் நிதி 
	# சென்னையில் குடிநீர் வழங்க உருவாக்கப்பட்டு வரும் புதிய நீர்பிடிப்பு ஏரிக்காகவும் கூடுதல் நிதி ஒதுக்கப்படலாம்
	# அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் குறித்தான புதிய அறிவிப்புகள் 
	# சத்துணவுத்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்குதல் 
	# விவசாயிகளுக்காக டெல்டா குறித்த அறிவிப்புகள்