Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளியே வராமல் வாக்கு கேட்பது இதுவே முதல்முறை! – மு.க.ஸ்டாலின் குறித்து அண்ணாமலை!

Webdunia
செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (12:41 IST)
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தலில் முதல்வர் வெளியே வராமல் வாக்கு சேகரிப்பது இதுவே முதல்முறை என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியான நிலையில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது.

அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய பாஜக தமிழகம் முழுவதும் தனியாக உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்கிறது. பாஜக மாநில தலைவரான அண்ணாமலை மாவட்டங்கள்தோறும் பயணம் மேற்கொண்டு பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் பிரச்சாரத்தில் பேசிய அவர் “தமிழ்நாட்டில் தேர்தல் ஒன்றிற்கு முதல்வர் வெளியே வராமல் காணொலி மூலமாக வாக்கு கேட்பது இதுவே முதல்தடவை. திமுகவினர் பொங்கலுக்கு வாங்கிய கரும்பு ஒன்றிற்கு ரூ.15 என்ற அளவில் ஊழல் செய்துள்ளனர்” என பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments