தமிழ்நாடு முழுவதும் நடைபயணம்! அண்ணாமலை தயார்!

Webdunia
வெள்ளி, 20 ஜனவரி 2023 (13:52 IST)
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாக கூறி வந்த நிலையில் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை இருந்து வரும் நிலையில் கட்சி பல சர்ச்சைகளை தொடர்ந்து சந்தித்து வருகிறது. பலர் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் அண்ணாமலைக்கு Z பிரிவு பாதுகாப்பு  வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு நடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் அண்ணாமலை தீவிரமாக இறங்கியுள்ளார். இதற்காக அவர் மாநிலம் தழுவிய நடைபயணத்தை விரைவில் மேற்கொள்ள உள்ளதாக பேசிக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் தற்போது ஏப்ரம் 14ம் தேதி அண்ணாமலை தனது நடைபயணத்தை தொடங்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 14ம் தேதி திருச்செந்தூரில் இருந்து நடைபயணம் தொடங்கி தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்கள் வழியாகவும் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அஜித் வீடு, காங்கிரஸ் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: கோலிவுட்டில் பரபரப்பு!

சபரிமலை சீசன்: பக்தர்களுக்காக 3 சிறப்பு ரயில்கள்.. இன்று முதல் முன்பதிவு தொடக்கம்!

SIR திருத்தத்தை கண்டித்து போராட்டம் நடத்தும் தவெக!.. விஜய் கலந்து கொள்வாரா?!...

புல்வாமா தாக்குதலுக்கே இன்னும் பதில் கிடைக்கவில்லை: டெல்லி குண்டுவெடிப்பு குறித்து காங்கிரஸ்..!

பேருந்து பயணத்தின்போது மர்மமாக இறந்த 21 வயது மாடல் அழகி.. காதலன் கொலை செய்தாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments