Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாவர்க்கர் மன்னிப்பு கேட்டது உண்மை; கோட்சேவை ஏற்க மாட்டோம்! – பாஜக அண்ணாமலை விளக்கம்!

Webdunia
வெள்ளி, 1 அக்டோபர் 2021 (11:13 IST)
சாவர்க்கர் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் சாவர்க்கர் மன்னிப்பு கேட்டது உண்மை என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடந்த “சாவர்கர் எ கான்ஸ்டன் லிகசி” என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கலந்துக் கொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “சாவர்கர் ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கேட்டவர் என தொடர்ந்து அடையாளப்படுத்தப்படுகிறார். அவர் மன்னிப்பு கேட்டது உண்மைதான். ஆனால் அது அரசியல்ரீதியான தந்திரம். காந்தி கொலைக்கும் சாவர்க்கருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதேசமயம் காந்தியை கொன்ற கோட்சேவை பாஜக ஏற்றுக்கொள்ளவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments