Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல்காந்தி தமிழ்நாட்டில் நுழைய ப்ளான் பண்றார்..? – அண்ணாமலை கருத்து

Webdunia
வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (14:50 IST)
தமிழகத்தில் பாஜக வெல்ல முடியாது என ராகுல்காந்தி பேசியதற்கு அண்ணாமலை பதிலளித்துள்ளார்.

சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நீட் குறித்து தமிழக அரசு இயற்றிய மசோதா கிடப்பில் இருப்பது குறித்து திமுக எம்.பிக்கள் குரலெழுப்பி வந்தனர். அப்போது பேசிய காங்கிரஸ் எம்.பி, பாஜகவால் ஒருநாளும் தமிழகத்தை ஆள முடியாது என பேசியது வைரலானது. இதுகுறுத்து கேட்டபோது பிறப்பால் இல்லாவிட்டாலும் நானும் ஒரு தமிழன்தான் என ராகுல்காந்தி பேசியிருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை “தமிழகத்தில் கண்டிப்பாக பாஜக ஆட்சி அமைக்கும். திமுகவின் நீட் நாடகம் முடிவுக்கு வந்துவிட்டது. நாளை நடைபெற உள்ள நீட் குறித்த அனைத்து கட்சி ஆலோசனையில் பாஜக பங்கேற்காது. ராகுல்காந்திக்கு கேரளாவில் மவுசு குறைந்து விட்டதால் தமிழகத்தில் நுழைய திட்டமிடுகிறார்” என பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் வெயில் அதிகரிக்கும்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன்: மம்தா பானர்ஜி திட்டவட்டம்

ரிசல்ட்டுக்கு முன்பாக தமிழகம் வரும் பிரதமர் மோடி! குமரியில் தியானத்தில் ஆழ்கிறார்?

அரசு வேலை வாங்கித் தருகிறேன்.! தாசில்தார் என கூறி பல லட்சம் மோசடி.! கார் ஓட்டுநர் கைது..!!

காதலிக்கு இறுதிச்சடங்கு செய்ய காசில்லை.. பிணத்தை சாலையில் போட்டு சென்ற லிவ்-இன் காதலன்!

அடுத்த கட்டுரையில்
Show comments