Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆடு, மாடுகளுடன் வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கிறேன்.. அண்ணாமலை

Siva
வெள்ளி, 16 மே 2025 (14:00 IST)
முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "தற்போது ஆடு மாடுகளுடன் நிம்மதியாக இருக்கிறேன்," என்று சமீபத்தில் அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
தமிழக பாஜக தலைவராக சில ஆண்டுகளாக இருந்து, தமிழகத்தில் பாஜகவை வளர்த்துவிட்டவர் அண்ணாமலை என்று கூறலாம்.
 
இந்த நிலையில், தற்போது நயினார் நாகேந்திரன் தலைவராக இருப்பதற்கிடையே, அண்ணாமலை மன நிம்மதியுடன் இருப்பதாக பேட்டி அளித்துள்ளார்.
 
"ஆடு மாடுகளுடன் நிம்மதியாக இருக்கிறேன். விவசாயம் பார்க்கிறேன். நேரம் கிடைத்தால் கோவிலுக்கு செல்கிறேன். தேவையில்லாத வேறு வேலையை பார்க்காமல், என்னுடைய பணியை சந்தோஷமாகச் செய்கிறேன்," என்று தெரிவித்துள்ளார்.
 
மேலும், "புத்தகங்கள் படிக்க நிறைய நேரம் கிடைக்கிறது. வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கிறேன். இப்படியே பயணம் செய்ய வேண்டும் என விரும்புகிறேன்," என்றும் அவர் தெரிவித்தார்.
 
அதே சமயம், "தேசிய அளவில் எனக்கு புதிய பொறுப்பு கிடைக்கும் வாய்ப்பு உள்ளதா என்பது எனக்கு தெரியாது. இப்போதைக்கு நான் நிம்மதியாக இருக்கிறேன், அது போதும்," என்றும் அவர் கூறியுள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மொஹரம் பண்டிகை அரசு விடுமுறை ஞாயிறா? திங்களா? தமிழக அரசு விளக்கம்..!

பிரஷாந்த் கிஷோர் தவெகவின் ஆலோசகர் பதவியிலிருந்து விலகல்: என்ன காரணம்?

காவல்துறை அதிகாரியை சரமாரியாக அடித்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள்.. என்ன நடந்தது?

IRCTC-யின் 'ஸ்ரீ ராமாயண யாத்திரை' டீலக்ஸ் ரயில் பயணம்.. தொடங்குவது எப்போது? கட்டணம் எவ்வளவு?

தேர்தலுக்கு பின்புதான் முதலமைச்சர் யார்? என்பதை முடிவு செய்வோம்: டிடிவி தினகரன்

அடுத்த கட்டுரையில்
Show comments