சாராயம் விற்ற பணத்தில் தான் முப்பெரும் விழா நடைபெற்றது.. திமுக குறித்த அண்ணாமலை விமர்சனம்..!

Mahendran
வியாழன், 18 செப்டம்பர் 2025 (17:40 IST)
இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை, தி.மு.க.வின் முப்பெரும் விழா குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
 
"தி.மு.க.வின் முப்பெரும் விழா சாராயம் விற்ற பணத்தில் நடத்தப்பட்டது" என்று அண்ணாமலை குற்றம் சாட்டினார். இது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜியை உத்தமர் போல முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டுவதையும் அண்ணாமலை விமர்சித்தார். "செந்தில் பாலாஜியை முன்பு திருடன் என்று அவரே விமர்சித்துவிட்டு, இப்போது அவருக்கு பாராட்டு தெரிவிக்கிறார்" என்று அண்ணாமலை கூறினார்.
 
முதல்வர் மு.க. ஸ்டாலின் மண் குதிரையை நம்பி காவிரி நோக்கி பயணிக்கிறார். 2026 தேர்தலுக்குள் அந்த மண் குதிரை காவிரி கரையில் காணாமல் போய்விடும்" என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
 
அண்ணாமலையின் இந்த கடுமையான விமர்சனங்கள் தி.மு.க. தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் நெரிசல் பலி: சிபிஐ முதற்கட்ட அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்

நேற்று திடீரென மூடப்பட்ட சென்னை அமெரிக்க தூதரகம்.. என்ன காரணம்?

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா பதவி பறிக்கப்படுகிறதா? நிர்வாகிகளை கூண்டோடு மாற்றும் விஜய்?

வறுமையை ஒழித்த கேரளா! இனியாவது உணருமா தமிழகம்? - அன்புமணி வேதனை!

தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு வந்த புது மணப்பெண் தற்கொலை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments