Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சேது சமுத்திர திட்டத்தை தடுத்து நிறுத்தியது யார்? அண்ணாமலை விளக்கம்!

annamalai
, திங்கள், 9 ஜனவரி 2023 (11:16 IST)
சேது சமுத்திர திட்டத்தை தடுத்து நிறுத்தியது யார்? அண்ணாமலை விளக்கம்!
சேது சமுத்திர திட்டத்தை தடுத்து நிறுத்தியது பாஜக என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் குற்றஞ்சாட்டி நிலையில் சேது சமுத்திர திட்டத்தை தடுத்து நிறுத்தியது யார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார். 
 
சேது சமுத்திர திட்டத்தை டிஆர் பாலு தான் முன்னெடுத்தார் என்றும் அதை தடுத்து நிறுத்தியது பாஜக என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார். பெரிய கப்பல்கள் செல்ல முடியாத அளவுக்கு உள்ள மணல் திட்டுகளை அள்ளி அதே கடலில் ஆழமான பகுதியில் வீச வேண்டும் என்றும் இது அறிவியலுக்கு சாத்தியமில்லாதது என்பதால் நீதிமன்றம் தான் அதை தடுத்து நிறுத்தியது என்றும் இந்த திட்டத்தை தடுத்து நிறுத்தியது பாஜக அல்ல என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
 
இந்த திட்டத்தின் மூலம் திமுகவை வளப்படுத்தும் நோக்கில் டிஆர் பாலு முயற்சி செய்தார் என்றும் அதனை நீதிமன்றம் தடுத்து நிறுத்தியது என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எலும்பை உறைய வைக்கும் கடும் குளிர்! வெளியே வராத மக்கள்! – டெல்லியில் ஒரு வாரம் விடுமுறை!