Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறையில் இருந்து கொண்டே அமைச்சர்களை இயக்குகிறார் செந்தில் பாலாஜி: அண்ணாமலை

Siva
திங்கள், 8 ஏப்ரல் 2024 (13:30 IST)
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருந்து கொண்டே அமைச்சர்களை இயக்குகிறார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் காட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களை சந்தித்தபோது கோவையில் பிரச்சாரத்தில் ஈடுபட திமுக அமைச்சர்களுக்கு சிறையில் இருந்தே கதை திரைக்கதை வசனம் எழுதிக் கொடுப்பது செந்தில் பாலாஜி தான் என்றும் சிறையில் இருந்து தினமும் அவர் செல்போனில் பேசி அமைச்சர்களிடம் ஐடியா கொடுக்கிறார் என்றும் அவர் தெரிவித்தார்

ஆனால் இந்த முறை திமுக தங்க சுரங்கத்தையே கோவையில் கொட்டினாலும் பாஜக தான் வெற்றி பெறும் என்றும் பதிவான வாக்குகளில் 60% வாக்குகள் எனக்கு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்

நயினார் நாகேந்திரனுக்கு எதிராக சதி வலையில் பின்னப்பட்டுள்ளது என்றும், சதியின் காரணமாக அவரது பெயர் சொல்லப்பட்டுள்ளது என்றும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நயினார் நாகேந்திரன் கூறியிருக்கிறார் என்றும் அவர் தெரிவித்தார்

மேலும் பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தமிழக அரசை கேட்டுக் கொண்டார்.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயத்தில் மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்: முதல்வர் ஸ்டாலின்

அயோத்தியில் 2ஆம் கட்ட கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடு..!

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்த வாரத்தில் 2வது நாளாக உயரும் தஙக்ம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments