Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருவர் ஜெயிலில்.. இன்னொருவர் வேடந்தாங்கல் பறவை போல்.. கரூர் குறித்து அண்ணாமலை விமர்சனம்..!

Siva
வியாழன், 28 மார்ச் 2024 (07:58 IST)
கரூர் மாவட்ட திமுக செயலாளர் ஜெயிலில் இருக்கிறார் என்றும் கரூர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி வேடந்தாங்கல் பறவை போல அவ்வப்போது தொகுதி பக்கம் வந்து செல்கிறார் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்திருக்கிறார்
 
கரூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக மீண்டும் ஜோதிமணி போட்டியிடும் நிலையில் அவர் தொகுதி பக்கமே வருவதில்லை என்று அந்த தொகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
 
இது குறித்து கருத்து கூறிய அண்ணாமலை, கரூர் எம்பி ஜோதிமணி தொகுதி பக்கமே வருவதில்லை என்றும் வேடந்தாங்கல் பறவை சீசனுக்கு மட்டும் வந்து செல்வதை போலவே ஜோதிமணி கரூர் தொகுதிக்கு வந்து செல்கிறார் என்றும் கூறியிருந்தார்

அதேபோல் கரூரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். திமுக அறிவித்த 521 தேர்தல் வாக்குறுதிகளில் 20 வாக்குறுதிகள் கூட நிறைவேற்றப்படவில்லை என்றும் அப்படி நிறைவேற்றி விட்டதாக முதல்வர் கூறினால் அதை பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிப்பன் மாளிகையில் பேச்சுவார்த்தை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்குமா?

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

அடுத்த கட்டுரையில்
Show comments