Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடப்பாடி பழனிசாமி ஒரு அரைவேக்காடு: அண்ணாமலை அதிரடி பேட்டி..!

Siva
வியாழன், 14 மார்ச் 2024 (19:17 IST)
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி போதைப்பொருள் விவகாரத்தில் அரைவேக்காட்டுத்தனமான  பேசுகிறார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக பிரிந்த பிறகு திமுகவை விமர்சனம் செய்வது போலவே பாஜகவையும் அண்ணாமலையையும் விமர்சனம் செய்து வருகிறது என்பது தெரிந்தது. இந்த நிலையில் போதைப்பொருள் விவகாரம் குறித்து சமீபத்தில் பேட்டி அளித்த எடப்பாடி பழனிச்சாமி குஜராத் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் அதிகமாக போதை பொருள் பிடிபடுகிறது என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை ’ஒரு பார்டர் மாநிலத்தில் அதிகமாக போதை பொருள் பிடிபடுகிறது என்றால் அங்குள்ள காவல் துறையினர் ஒழுங்காக வேலை செய்கின்றனர் என்று அர்த்தம். இதுகூட புரியாமல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரைவேக்காட்டுத்தனமான பேசுகிறார் என்று தெரிவித்துள்ளார்

மேலும் தமிழ்நாட்டை பொறுத்தவரை போதை பொருள் விற்பவர்களுக்கு அரசே ஆதரவு தந்து வருகிறது என்பதுதான் எங்கள் குற்றச்சாட்டு என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments