Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அறிவாலயம் அரசின் அறிவிப்புக்கு எங்கள் போராட்டமே காரணம்: அண்ணாமலை

Webdunia
வெள்ளி, 16 டிசம்பர் 2022 (19:31 IST)
அன்னூரில் விவசாய நிலங்களை பூங்கா அமைப்பதற்கு கையகப்படுத்த மத்திய அரசின் அறிவிப்புக்கு எங்களது போராட்டமே காரணம் என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
 
அன்னூரில் விவசாய நிலங்களை கையகப்படுத்தி தொழில் பூங்கா அமைப்பதற்கு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து விவசாயிகளுடன் இணைந்து தமிழக பாஜக நடத்திய மாபெரும் போராட்டத்தின் எதிரொலியாக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படாது என்று அறிவித்துள்ளது அறிவாலயம் அரசு.
 
விவசாய பெருங்குடி மக்களின் குரலுக்கும்  தமிழக பாஜகவினரின் குரலுக்கும் செவி சாய்த்த முதல்வர் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.  அனைத்து தரப்பு மக்களின் உரிமைக்காக தொடர்ந்து தமிழக பாஜக குரல் எழுப்பும் என்பதை மிக பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம். 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவது பா.ஜ.க.வின் கடமை - நெல்லையில் அண்ணாமலை உரை

அமித்ஷா முன்னிலையில் பாஜகவுக்கு தாவிய திமுக பிரபலம்! - தொண்டர்கள் அதிர்ச்சி!

அங்கிள் என கூறிய விஜய்.. அண்ணாச்சி என கூறிய நயினார் நாகேந்திரன்.. திமுகவினர் ஆத்திரம்..!

உதயநிதி முதல்வராகவும் முடியாது.. ராகுல் காந்தி பிரதமராகவும் முடியாது: அமித்ஷா

கல்வி உதவித்தொகை என்ற பெயரில் புதிய மோசடி: UPI மூலம் பணத்தை இழந்த மாணவர்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments