Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி குறித்த சர்ச்சை கருத்து: அருணா ஜெகதீசன் அறிக்கைக்கு அண்ணாமலை கண்டனம்!

Webdunia
சனி, 22 அக்டோபர் 2022 (14:06 IST)
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை செய்த அருணா ஜெகதீசன் ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையில் ரஜினிகாந்த் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 
 
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் கடந்த சில வருடங்களாக விசாரணை செய்தது என்பதும் சமீபத்தில் அந்த விசாரணை அறிக்கையை தமிழக முதல்வரிடம் சமர்ப்பித்தது என்பது தெரிந்ததே
 
அந்த அறிக்கையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து ரஜினிகாந்த் பேட்டி அளித்தது குறித்து சர்ச்சைக்குரிய கருத்து பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் அருணா ஜெகதீசன் அறிக்கைக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்
 
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் பேட்டி அளித்தது குறித்து விசாரணை அறிக்கையில் உள்ள கருத்துக்களை தமிழக பாஜக வன்மையாக கண்டிக்கிறது என்று தெரிவித்த அண்ணாமலை, குடியுரிமை திருத்த சட்டம் குறித்து நடிகர்கள் கருத்து தெரிவிக்கும்போது ரஜினிகாந்த் கருத்து தெரிவிப்பதில் தவறில்லை என்றும் நடிகர் ரஜினி கருத்து கூறுவதற்கு முழு உரிமை உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments