Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரோடு கிழக்கில் அதிமுக வெற்றி பெற பாடுபடுவோம்: அண்ணாமலை பேட்டி

Webdunia
வியாழன், 9 பிப்ரவரி 2023 (11:49 IST)
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரின் வெற்றிக்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார் 
 
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் தென்னரசு போட்டியிடுகிறார் என்பதும் அவருக்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஈரோடு கிழக்கில் அதிமுக வேட்பாளர் நிச்சயம் வெற்றி பெறுவார் என்றும் அவருடைய வெற்றிக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்றும் தெரிவித்தார். 
 
ஒரு ஆளுங்கட்சி இடைத்தேர்தலுக்கு இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுப்பது தமிழக வரலாற்றிலேயே நடைபெற்றது கிடையாது என்றும் இதிலிருந்து திமுகவுக்கு பயம் வந்துள்ளது என்று தெரிய வந்துள்ளது என்றும் தெரிவித்தார். 
 
ஒரு சாதாரண இடைத்தேர்தலுக்காக முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் சூறாவளி பிரச்சாரம் செய்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். திமுக வேட்பாளர்கள் பேசினாலே எங்கள் பக்கம் தானாகவே வாக்குகள் வந்துவிடும் என்றும் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எக்ஸ்ட்ரா தொகுதி வேணும்னு ஆசைதான்.. ஆனால் தலைமை..? - கூட்டணி குறித்து துரை வைகோ!

ஆப்பிரிக்காவில் சாட்டை துரைமுருகன்.. முத்தம் கொடுத்த பழங்குடி பெண்! திமுகவை கலாய்த்த வீடியோ வைரல்!

இந்தியாவில் அவசரமாக இறங்கிய பிரிட்டிஷ் போர் விமானம்! பக்கத்தில் நெருங்கக்கூட விடாத பிரிட்டன்! - என்ன காரணம்?

மகனுக்கு பார்த்த பெண்ணுடன் காதல்.. மாமனாருடன் ஓடிய மருமகள்!

நீங்க அந்த மதம்தானே.. இந்து மதத்துல ஏன் மூக்கை நுழைக்கிறீங்க? - அமீர் பேச்சுக்கு பேரரசு கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments