Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணக்குல இல்லாத சொத்து இருந்தா அரசே எடுத்துக்கட்டும்! – அண்ணாமலை சவால்!

Webdunia
ஞாயிறு, 18 டிசம்பர் 2022 (12:22 IST)
பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கட்டியுள்ள வாட்ச் குறித்து சர்ச்சை எழுந்துள்ள நிலையில் அதற்கு ட்விட்டரில் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தனது ட்விட்டரில், பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கட்டியுள்ள ரபேல் வாட்ச் குறித்தும் அதன் விலை குறித்தும் குறிப்பிட்டு அதன் பில்லை காட்ட முடியுமா என கேள்வி எழுப்பி இருந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதை தொடர்ந்து அதற்கு பதில் அளிக்கும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை “ஊழல் பற்றி திமுக என்னுடன் விவாதிக்க விரும்பினால் அவர்களை விட அதற்கு நான் தயாராகவே உள்ளேன்.

நான் அணிந்துள்ள ரபேல் வாட்ச் மே 2021ல் நான் பாஜக தலைவராவதற்கு முன்பே வாங்கப்பட்டது. என்னுடைய வாட்ச் பில், வாழ்நாள் வருமானம், வங்கி பரிவர்த்தனை விவரங்கள் என அனைத்தையும் காட்ட நான் தயாராக உள்ளேன். எனது அசையா சொத்து மதிப்புகள் மொத்தமே ரூ.1 லட்சத்திற்குள்தான் அடக்கம். நான் காட்டும் ஆவணங்களை விட என்னிடம் ஒரு பைசா அதிகமாக இருந்தால் கூட அரசு அவ்வளவையும் அரசுக்கு கொடுத்து விடுகிறேன்” என்று பேசியுள்ளார்.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

சவுக்கு சங்கரை போல் பிரகாஷ்ராஜை கைது செய்ய வேண்டும்: நாராயணன் திருப்பதி..!

ஜெயலலிதா தீவிர இந்துத்துவா தலைவர் என்பதை அதிமுக உடன் விவாதிக்க தயார்: அண்ணாமலை

பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலச்சரிவு.. உயிருடன் புதைந்த 2 ஆயிரம் பேர்...!

பரமாத்மா அனுப்பியதாக பிரதமர் மோடி கூறியதற்கு அதானி தான் காரணம்: ராகுல் காந்தி

நைஜீரியா: கிராமத்திற்குள் புகுந்து துப்பாக்கி முனையில் 160 பேரை கடத்திச் சென்றது யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments