Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தவம் இருக்கிறார்கள் என அண்ணாமலை கூறியது அதிமுகவை அல்ல.. எடப்பாடி பழனிச்சாமி

Mahendran
சனி, 8 மார்ச் 2025 (14:06 IST)
"பாஜக கூட்டணிக்காக சில கட்சிகள் தவம் இருக்கிறார்கள்" என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் கூறிய நிலையில், அவர் கூறியது அதிமுகவைக் குறித்ததாக அல்ல என எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
 
சமீபத்தில், கூட்டணி குறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, தங்களுக்கு திமுக தான் பிரதான எதிரி என்றும், திமுகவை வீழ்த்த எந்த கட்சியுடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம் என்றும் கூறியிருந்தார். இதனை அடுத்து, பாஜகவுடன் அதிமுக மீண்டும் கூட்டணி சேரும் என எதிர்பார்க்கப்பட்டது.
 
இந்த நிலையில், இதற்கு பதிலளித்த அண்ணாமலை, "பாஜகவுடன் கூட்டணி வைத்தால் தோற்றோம் என்று கூறியவர்கள் எல்லாம் இப்போது பாஜகவுடன் கூட்டணி வைக்க தவம் இருக்கிறார்கள்" என்று கூறினார்.
 
இதற்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, "அண்ணாமலை அதிமுக என்று குறிப்பிட்டுச் சொல்லவில்லை. அதனால் தேவையில்லாமல் அவதூறு பரப்ப வேண்டாம். ஆறு மாதங்களுக்குப் பின்னர் கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜிம்மில் பரிந்துரை செய்த ஊக்கமருந்து.. 3 நாட்கள் சிறுநீர் வெளியேறாமல் உயிரிழந்த வாலிபர்..!

7 நாட்களில் 23 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம்.. 19 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!

காற்றழுத்த தாழ்வுநிலை ஒரு பக்கம் இருக்கட்டும்.. இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும்..!

அரை மணி நேரத்தில் ஆதாரங்களை ஒப்படையுங்கள்.. சீமான் வழக்கில் நீதிபதி உத்தரவு..!

டாஸ்மாக் வழக்கு: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments