தவம் இருக்கிறார்கள் என அண்ணாமலை கூறியது அதிமுகவை அல்ல.. எடப்பாடி பழனிச்சாமி

Mahendran
சனி, 8 மார்ச் 2025 (14:06 IST)
"பாஜக கூட்டணிக்காக சில கட்சிகள் தவம் இருக்கிறார்கள்" என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் கூறிய நிலையில், அவர் கூறியது அதிமுகவைக் குறித்ததாக அல்ல என எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
 
சமீபத்தில், கூட்டணி குறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, தங்களுக்கு திமுக தான் பிரதான எதிரி என்றும், திமுகவை வீழ்த்த எந்த கட்சியுடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம் என்றும் கூறியிருந்தார். இதனை அடுத்து, பாஜகவுடன் அதிமுக மீண்டும் கூட்டணி சேரும் என எதிர்பார்க்கப்பட்டது.
 
இந்த நிலையில், இதற்கு பதிலளித்த அண்ணாமலை, "பாஜகவுடன் கூட்டணி வைத்தால் தோற்றோம் என்று கூறியவர்கள் எல்லாம் இப்போது பாஜகவுடன் கூட்டணி வைக்க தவம் இருக்கிறார்கள்" என்று கூறினார்.
 
இதற்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, "அண்ணாமலை அதிமுக என்று குறிப்பிட்டுச் சொல்லவில்லை. அதனால் தேவையில்லாமல் அவதூறு பரப்ப வேண்டாம். ஆறு மாதங்களுக்குப் பின்னர் கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

19 வயது இளைஞர் வேகமாக ஓட்டிய கார் மோதி கர்ப்பிணி மரணம்.. வயிற்றில் இருந்த குழந்தையும் பலி..!

காதலிக்க மறுத்த 12ஆம்வகுப்பு மாணவியை குத்தி கொலை செய்த இளைஞர்.. ராமநாதபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

பழைய, சிப் இல்லாத சாதாரண பாஸ்போர்ட்டுகள் எதுவரை செல்லும்: அதிகாரிகள் விளக்கம்..!

மதுரைக்கும், கோவைக்கும் "NO METRO".. மத்திய அரசுக்கு முக ஸ்டாலின் கண்டனம்..!

வாக்குச்சாவடி அலுவலர்களின் ஊதியம் அதிரடி உயர்வு: தமிழக அரசு அரசாணை வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments