என்னை பத்தி தெரியணும்னா என் புக்க படிங்க! – ஆஃப் செய்த அண்ணாமலை!

Webdunia
ஞாயிறு, 30 ஆகஸ்ட் 2020 (16:24 IST)
சமீபத்தில் பாஜகவில் இணைந்த அண்ணாமலை ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்றது குறித்து சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் அண்ணாமலை வாழ்க்கை வரலாறு புத்தகம் எழுத உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த அண்ணாமலை யுபிஎஸ்சி தேர்வில் வெற்றிபெற்று கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய அவர் சமீபத்தில் தனது பதவியை துறந்து பாஜகவில் இணைந்தார். இந்நிலையில் அவர் ஐபிஎஸ் தேர்வில் வெற்றிப்பெறுவதற்கு ஆர்.எஸ்.எஸ் போன்ற இயக்கங்கள் பின்னணியில் உதவியதாய் சிலர் சமூக வலைதளங்களில் பேசி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ள அண்ணாமலை தான் எந்த பின்னணியும் இல்லாமல் சுயமாக படித்து ஐபிஎஸ் பதவியை அடைந்ததாக கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து பலர் பேசிவருவது பற்றி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர்,” உங்களது கேள்விகளுக்கு விரைவில் வெளியாகவுள்ள எனது புத்தகம் பதிலளிக்கும்” என கூறியுள்ளார்.

எனவே விரைவில் அண்ணாமலை தனது சுயசரிசை அல்லது அரசியல் நிலைபாடு குறித்த புத்தகம் ஒன்றை எழுதுவார் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

37 மாவட்டங்களை இரவில் செய்யப்போகும் கனமழை! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

கரூர் விவகாரம்.. அரசின் தவறுகளை சுட்டிக்காட்டியதால் புதிய தலைமுறை நீக்கமா? அண்ணாமலை கண்டனம்..!

சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவர்கள்.. தரையில் அமர்ந்து குழந்தை பெற்ற கர்ப்பிணி; அதிர்ச்சி சம்பவம்..!

விஜய்யின் பாதுகாப்பு 'Y' பிரிவிலிருந்து 'Z' பிரிவுக்கு மாற்றமா? உள்துறை அமைச்சகம் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments